தமிழகம்

விஏஓ மனைவியிடம் தாலி செயின் பறிப்பு: பைக் கொள்ளையர்கள் அட்டகாசம்!

24views
காட்பாடி மெட்டுக்குளத்தில் விஏஓ மனைவியிடம் தாலி செயினை பறித்துச் சென்ற பைக் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளம் பகுதி செக் போஸ்ட் வீதியைச் சேர்ந்தவர் திலீப் குமார். இவர் விஏஓவாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கோமதி (31). இவர்கள் இருவரும் நேற்றுமுன் தினம் மாலை சினிமாவுக்கு சென்றுள்ளனர். சினிமா முடிந்து வீட்டுக்கு டூவீலரில் திரும்பி வந்துள்ளனர். காட்பாடி மெட்டுக்குளம் செக் போஸ்ட் வீதியில் சென்றபோது எதிரில் பஜாஜ் பல்சர் மோட்டார் பைக்கில் வந்த இரண்டு கொள்ளையர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கோமதி கழுத்தில் இருந்த 3 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து திலீப் குமார்
கொடுத்த புகாரின் பேரில் காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், காட்பாடி டிஎஸ்பி பழனி மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து மோட்டார் பைக்கில் வந்து பெண்ணின் தாலி செயினை பறித்துச் சென்ற கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இப்படி இரவு 9:40 மணியளவில் கணவனுடன் வந்த மனைவியின் கழுத்தில் இருந்த தாலி செயினை கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் மெட்டுக்குளம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. டூவீலரில் வந்த கொள்ளையர்கள் பறித்துச் சென்ற மூன்று பவுன் தங்கச் செயினையும், 2 பைக் கொள்ளையர்களையும் காட்பாடி போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!