தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் மதிமுக 35 -வது ஆண்டு விழா முன்னிட்டு அண்ணாசிலைக்குமாலை அணிவித்து அன்னதானம்

76views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் மதிமுக கட்சி ஆரம்பித்து 35 – ஆண்டு ஆனதையொட்டி அங்குள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்தனர்.பின் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பகுதி செயலாளர் இளங்கோவன் தலைமையில் அவைத்தலைவர் துரைவேலு முன்னிலையில் மாவட்ட செயலாளர் கோபி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
காட்பாடி ஒன்றிய செயலாளர் பிரம்மபுரம் ஆறுமுகம், விவசாய அணி மாநில செயலாளர் குணசேகரன், மாவட்ட துணைசெயலாளர் ராமமூர்த்தி,பொதுக்குழு உறுப்பினர் ரவிக்குமார், வேலூர் பகுதி செயலாளர் சீனிவாசன், தொண்டர் அணி பாண்டியன், கன்னியப்பன், ஏழுமலை, மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!