தமிழகம்

மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டி கிருஸ்துவ மாணவர்கள் காட்பாடியில் அமைதிப் பேரணி

102views
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள கிருஸ்துவ பள்ளியான டான்பாஸ்கோ, ஆக்சிலியம்பள்ளி, கல்லூரி, ஆசிரியர் பள்ளி மாணவர-மாணவிகள் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் ஆக்சிலியம் கல்லூரியில் துவங்கி, காலேஜ் ரவுண்டானா , ஓடைப் பிள்ளையார்கோயில், சில்க் மில், கல்யாண மண்டபம் வழியாக மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும், கிருஸ்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், உள்ளிட்டவைகளை வலியுறுத்தி இந்த கவனஈர்ப்பு அமைதி பேரணி நடந்தது.  தென் போஸ்கோ நிறுவன தாளாளர் தந்தை சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார்.  காந்திநகர் பங்குதந்தை அந்தோணிசாமி பேரணியை துவக்கிவைத்தார்.
கிறிஸ்டோபர், அருள் சேகரி மற்றும் அருட்கன்னியர்கள், பங்கு பேரவை உறுப்பினர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  முனைவர் ஐசக் கதிர்வேலு கண்டன உரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் தாசன், உடற்கல்வி இயக்குநர் சௌந்தர் நன்றி கூறினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!