தமிழகம்

காட்பாடி நாராயண பள்ளியில் கேட் விழுந்து செக்கியூரிட்டி உயிரிழந்த பரிதாபம்

288views
வேலூர் மாவட்டம் பழைய காட்பாடியில் நாராயண-இ-டெக்னோ என்ற தனியார் பள்ளி இயங்கிவருகிறது.  இதில் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தை சேர்ந்த ராமமூர்த்தி (60) செக்கியூரிட்டியாக பணிபுரிந்து வந்தார்.  இந்நிலையில் 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை சுமார் 7.30 மணியளவில் கேட் அருகில் பணியில் இருந்த அந்த இரும்பு தகடு கேட் செக்கியூரிட்டிமேல் விழுந்ததில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

விரைந்து வந்த காட்பாடி காவல்துறையினர் உடலை மீட்டு வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து காட்பாடி காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!