தமிழகம்

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் 78-வது சுதந்திர தின விழா

25views
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கில்தான்பட்டறை, காட்பாடி தாலுகா அலுவலக வளாகத்தில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்ட து. காட்பாடி வட்டாச்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மகாத்மா காந்தி திருஉருவப்படத்திற்கு வட்டாச்சியர் ஜெகதீஸ்வரன் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். இதனைத் தொடர்ந்து தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!