தமிழகம்

காட்பாடி ஜெயின் பள்ளிமாணவர்கள் வேலூர் கோசாலா பசுபாதுகாப்பு இல்லத்திற்கு நன்கொடை !!

30views
வேலூர் பகுதியில் ஜெயின் கோசாலா பசு பாதுகாப்பு இல்லம் உள்ளது. இதற்கு காட்பாடி பகவான் மகாவீர் தயா நிகேதன் ஜெயின் பள்ளி மாணவர்கள் நன்கொடை வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலாளர் ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர மாலதி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக ருக்ஜி ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கமல்டாலஸ்ரா, ஜெயின் கோசாலா செயலாளர் தர்மராஜ், விஜடி பேச்சாளர் பிரோனாஷர்மா பாட்டியா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவர்கள் வழங்கிய நன்கொடையை ஜெயின் கோசலா செயலாளர் தர்ம ராஜ் ஜெயினிடம் செயலாளர் ராஜேஷ் குமார் வழங்கினார். பாதுகாப்பு இல்லத்தில் உள்ள பசுக்களுக்கு பழம் மற்றும் கீரைகள் வழங்கப்பட்டது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!