தமிழகம்

காட்பாடியில் திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் : தலைமை கழக பேச்சாளர் பங்கேற்பு !!

37views
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ்நிலையத்தில் திமுக அரசை கண்டித்து வேலூர் மாநகர அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாநகர செயலாளர் எஸ் ஆர்கே அப்பு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக நட்சத்திர பேச்சாளர் கோபி. காளிதாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, மாநில எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் எம்.டி.பாபு, ஒன்றிய செயலாளர் சுபாஷ்,மாநகர அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி தலைவர் பிரம்மபுரம் பிரகாசம், வண்டறந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ், பகுதி செயலாளர் நாராயணன், அதிமுக மாமன்ற உறுப்பினர் காங்கேயநல்லூர் ரமேஷ், முன்னாள் சோளிங்கர் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், மகளிர் அணியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!