தமிழகம்

காட்பாடி பிரபல ரவுடிமனைவி, வழக்கறிஞர் அடையாள அட்டை விவகாரத்தில் சிக்கினார்.

364views
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த சீனிவாசன் (26) வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். அவரை சந்திக்க பிரபல காட்பாடி ரவுடி ஜானியின் மனைவி (33) கடந்த 3-ம் தேதி சிறைக்கு சென்றார்.  அப்போது சிறை காவலர்களிடம் தான் ஒரு வழக்கறிஞர் என்று கூறி அடையாள அட்டையை காண்பித்து உள்ளார்.  அதில் உள்ள எண்ணை இணையதளத்தில் பரிசோதித்தபோது, அந்த அடையாள அட்டைக்கு உரியவர் கிரேஸ் எப்சிபா, ஆவடி, திருவள்ளூவர் மாவட்டம் என்று இருந்தது.  அதேநேரம் இந்த அடையாள அட்டையை காண்பித்தவர், பிரபல ரவுடி காட்பாடி ஜானியின் மனைவி ஷாலினி என்று தெரியவந்தது.  அதனால் ஷாலினியை சிறைக்குள் அனுமதிக்க வில்லை.

இதனால் சிறை காவலர்களிடம் தகராறில் ஈடுப்பட்ட ஷாலினி அங்கிருந்து சென்றார்.  இது குறித்து பாகாயம் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஷாலினி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு ராஜா திரையரங்கம் அருகில் காவல் ஆய்வாளர் பாபு ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் மடக்கிபிடித்து கைது செய்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!