தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் பனிச்சமூட்டில் காருண்யா மருத்துவ கல்வி குழுமத்தின் சார்பாக நடைபெற்ற பத்தாவது சர்வதேச யோகா தினம்

170views
கன்னியாகுமரி மாவட்டம் பனிச்சமூட்டில் காருண்யா மருத்துவ கல்வி குழுமத்தின் சார்பாக நடைபெற்ற பத்தாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ரெவரன்ட் பாதர் பி.மரிய சூசை வரவேற்புரை வழங்க மாவட்ட ஆயுஷ் மருத்துவ அதிகாரி மருத்துவர் ஜெ.ராபர்ட் சிங் முன்னிலை வகிக்க மருத்துவ பேராசிரியர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் காமன்வெல்த் சங்கத்தின் பொதுச்செயலாளர் தலைமை தாங்க சிறப்பு விருந்தினர் சமூக சேவகர் மரு.தி.கோ. நாகேந்திரன் கொரோனாவை எதிர்த்து போராடிய முதல் தேசிய போராளி மற்றும் யோகா பயிற்சியாளர் டி.காளிதாஸ் கின்னஸ் சாதனையாளர் ஆகியோர் கலந்து கொண்டு யோகாவின் செயல்முறையோடு அதன் பயன்பாட்டையும் பொது மக்களுக்கும் விளக்கினார்கள்.
யோகா தினத்திற்கான ஏற்பாடுகளை மரு. ஜே.வி.ஜஸ்டின் ராஜ் தாளாளர் செய்திருந்தார். விழாவின் ஒரு அங்கமாக கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி சிறப்பு விருந்தினர்களோடு மரக்கன்றுகளும் நடப்பட்டன. நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!