கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி எய்ம்ஸ் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற 78- வது சுதந்திர தின விழா ஆரல்வாய்மொழி அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து மேலாண்மை அறங்காவலர் சமூக சேவகர் *டி. ஜோணி தலைமையில் நடைபெற்றது. சுதந்திர போராட்ட தியாகியின் வாரிசும் மருத்துவருமான தி. கோ. நாகேந்திரன் சமூக சேவகர், தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரை ஆற்றினார்.
சுதந்திர தின விழாவில் கற்போம் கற்போம் மனிதநேயத்தை பாதுகாக்க கற்போம் , கற்போம் கற்போம் தாய் திருநாட்டை பாதுகாக்க கற்போம் , கற்போம் கற்போம் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க கற்போம் , கற்போம் கற்போம் நம் சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் வீரர்களையும் போற்றக் கற்போம், கற்போம் கற்போம் உலக ஒற்றுமையை பாதுகாக்க கற்போம் என உறுதிமொழி அனைவராலும் எடுக்கப்பட்டது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழரசி, பிரின்சியா, அபின்ஸி ஆகியோர் செய்திருந்தனர் .அனைத்து பணியாளர்களும் மாணவியர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பித்தார்கள். தேசிய கீதத்துடன் விழா முடிவடைந்தது.விழா முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
எதிர்த்து கேள்வி கேட்ட நபரை வேலூர் திமுக மேயர் அடித்தாரா? மாநகர அதிமுக கண்டனம் வேலூர் மாநகராட்சி 31 வது வார்டு கொணவட்டம் காமராஜ் தெருவை சேர்ந்த நித்திய குமார்,...
டெல்லியில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்து பள்ளி கல்வித் துறை, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், உள்ளிட்ட...
கட்டி அணைத்துதான் உன்காதலை சொல்ல வேண்டுமென்றில்லை... உன் கைப்பிடிக்குள் என் கைகள் இருந்தாலே போதும்... உன் கோபங்களும் அதிகாரங்களும் என்னை என்ன செய்து விடபோகிறது.. உன் கைபிடியில்...
சூரிய அஸ்தமனமாகும் பொன் மாலை பொழுது. பறவைகள் கூட்டம் கூட்டமாக அவற்றின் கூட்டை நோக்கி செவ்வானத்தில் பறந்து செல்கின்றன. வெப்பக்காற்று தணிந்து சில்லென தென்றல் காற்று வீச...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.