தமிழகம்

வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெறுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

94views
இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய மக்களின் மத உணர்வுகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று மையங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பரமக்குடியில் மாவட்டச் செயலாளர் என் எஸ் பெருமாள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் என்.கே ராஜன், கே ஆர் சுப்பிரமணியன், மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி செல்வராஜ், டி எம் சிவக்குமார், எம் பி ருக்மாங்கதன், சட்டக்களம் இதழின் ஆசிரியர், சமூக ஆர்வலர் முகமது ஜின்னா மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது, பரமக்குடி ஒன்றிய பொறுப்பாளர் விஜயபாஸ்கர் எமனேஸ்வரம் மேற்கு பகுதி செயலாளர் கே ஜி நாகநாதன், நகர் துணைச் செயலாளர் ஹரிகரன், எம் கோட்டைச்சாமி, நகர் நிர்வாக குழு உறுப்பினர் வி ஆர் நாகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!