தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

110views
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மொத்தம் 10 சுற்றுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 817 காளைகள் விழ்க்கப்பட்டன. தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக சிறந்த காளையின் உரிமையாளர் அவனியாபுரத்தைச் சேர்ந்த திரு.ஜி.ஆர். கார்த்திக் அவர்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சார்பாக சிறந்த மாடுபிடி வீரர் அவனியாபுரத்தைச் சேர்ந்த செல்வன்.கார்த்திக்கிற்கு ( 17 காளைகள் ) கார் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த பரிசுகளை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி ஆகியோர் வழங்கினார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் அவர்கள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!