தமிழகம்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழா : பரிசுகள் வழங்கல்

117views
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் தொடர்ந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை காந்தி அம்மாள், ஓவியர் தங்கவேலு, கவிஞர் சுப்பையா, ஜே.சி.ஐ ட்ரான்ஸ் செட்டர், சுப்புலட்சுமி, முருகானந்தம், அருங்காட்சியக பணியாளர்கள் உலகநாதன், வயல்ராமன் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!