தமிழகம்

ஒசூரில் தமுமுக வின் சமுதாய பணிகளால் ஈர்க்கப்பட்ட ஏராளமான இளஞர்கள் தமுமுக வில் இணைந்தனர்

104views
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூர் மாநகர் பிஸ்மில்லா நகரில் தமுமுக – மமக வின் புதிய கிளை துவக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு தமுமுக மாவட்ட செயலாளர் ஏஜாஸ்கான் தலைமை தாங்கினார். மமக மாவட்ட துனை செயலாளர் சிராஜ் பாஷா அவர்கள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தமுமுக மாநில செயலாளர் அல்தாப் அஹமத், தமுமுக மாவட்ட தலைவர் ஜாகிர் ஆலம் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் தமுமுக மாநகர செயலாளர் அப்சர் பாஷா, மாநகர பொருளாளர் ரோஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பிஸ்மில்லா நகர் கிளை தலைவராக முதஸ்ஸிர், தமுமுக கிளை செயலாளராக யாசீன் , மமக கிளை செயலாளராக அஷ்வாக், தமுமுக-மமக கிளை பொருளாளராக மன்சூர் ஆகியோர் ஓரு மனதாக தேர்ந்து எடுக்கப் பட்டனர்.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ் கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!