தமிழகம்

ஒசூர் அருகே தளியில் தமுமுக வின் விழி அணி மற்றும் JCI இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான இலக்கு அமைத்து கற்றல் பயிற்சி முகாம்.

222views
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மனிதவள மேம்பாட்டு அணியான விழி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான “இலக்கு அமைத்து கற்றல்” பயிற்சி முகாம் இன்று 20.11.23 தளியில் உள்ள Shree Annapoorneshwari Public School ல் நடைபெற்றது.
விழி அணியின் மாவட்ட செயலாளர் முஹமத் சுஹேப் ஒருங்கிணைப்பில் JCI ன் மண்டல பயிற்சியாளர்கள் JC.HGF.மமதா.J மற்றும் JFM தியாகராஜன்.K ஆகியோர் மாணவர்களிற்கு பயிற்சி அளித்தனர்.
இம்முகாமில் மாணவர்களை ஈர்க்கக்கூடிய வகையில் பயிற்சியாளர்கள் மாணவர்களுடன் அவர்களின் இலக்கை நிர்ணயிக்கும் திறன்களை மேம்படுத்துதல், மதிப்புமிக்க நுண்ணறிவு மற்றும் நடைமுறை உத்திகளை வழங்கினர்.
இத் திறன்களை மாணவர்களிற்கு ஆரம்பத்திலேயே புகுத்துவது கல்வி ரீதியாக மட்டுமல்லாமல் அவர்களின் தனிப்பட்ட மற்றும் எதிர்கால தொழில் முயற்சிகளுக்கும் பயனளிக்கும் வகையில் இப்பயிற்சி முகாம் அமைந்தது.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!