தமிழகம்

ஒசூரில் ம.ஐ.க. ஆலோசனை கூட்டம்

134views
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகர பத்தலபள்ளி கிளையில் மஜகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கிளைச் செயலாளரும் ஊராட்சிமன்ற உறுப்பினருமான முஹம்மத் அலி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மஜக மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி சேலத்தில் நடைபெறுகின்ற சிறை நிரப்பும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தன்னிச்சையாக இளைஞர்கள் தங்களை மஜக வில் இணைத்துக் கொண்டனர்.

மாவட்ட செயலாளர் முஹம்மது உமர், மாவட்ட துணை செயலாளர்கள் ADS.சர்தார், சையத் ஜலால், சையத் அய்யூப், ஓசூர் ஒன்றிய செயலாளர் பாஷா, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஷெரீப், ஓசூர் மாநகர செயலாளர் முஹம்மத் அப்சல், மாநகர துணைச் செயலாளர் மஹபூப் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : A. முகமத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!