தமிழகம்

SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் சார்பாக ஓசூரில் நடைப்பெற்ற இப்தார் நிகழ்ச்சி

25views
SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் சார்பாக முஸ்லிம்களின் வக்ஃப் உரிமையை காப்போம் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி ஓசூரில் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் ஷபியுல்லா அவர்கள்தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட பொதுச் செயலாளர் ஷப்பீர் அகமது வரவேற்பு உரை ஆற்றினார்.  மாவட்டச் செயலாளர் ஜாவித் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  மாவட்ட செயலாளர் சவுத் அகமது மாவட்ட பொருளாளர் கலீம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இம்ரான் WIM மாவட்டத் தலைவர் பரிதா பேகம் தலி தொகுதி தலைவர் சமீர் ஓசூர் தொகுதி தலைவர் இம்தியாஸ் ஓசூர் மாநகரத் தலைவர் அப்சான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பயாஸ் அகமது கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் அஸ்கர் அலி, விசிக மாவட்ட செயலாளர் இராமச்சந்திரன், அதிமுக மனிதநேய பாசறை மாவட்ட செயலாளர் சந்திரன் 45வது வார்டு ஓசூர் மாநகர கவுன்சிலர் சந்துரு, 30வது வார்டு ஓசூர் மாநகர கவுன்சிலர் ஹெல்த் கமிட்டி உறுப்பினர் மோசின் தாஜ் நிசார், ஓசூர் பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் அசோசியேசன் முன்னாள் மாவட்ட பொருளாளர் அப்துற் ரஹீம், வழக்கறிஞர் பஷீர், தமிழ் தேச குடியரசு இயக்கம் விக்னேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் SDPI கட்சி அனைத்து மட்ட தலைவர்கள் செயல்வீரர்கள் மகளிர் பிரிவான WIM நிர்வாகிகள் பெண்கள் பொதுமக்கள் மற்றும் மாற்று மத சகோதரர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இறுதியாக மாவட்டத் துணைத் தலைவர் ஷாநவாஸ் நன்றி உரையாற்றினார்.
செய்தியாளர் : A முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!