தமிழகம்

குடியாத்தம் அருகே மின் கம்பி உரசியதால் வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து சாம்பல் !!

54views
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை அருகே ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியில் இருந்து வைக்கோல் கட்டுரைகள், மினி லாரியில் ஏற்றிக்கொண்டு திருவள்ளுவர் மாவட்டம் காடநல்லூர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த அருள் (28), பேர்ணாம்பட்டு பகுதிக்கு விற்பனை செய்ய எடுத்துக் கொண்டு சென்றார்.
நெல்லூர் பேட்டை அருகே சென்றபோது சாலையின் பக்கவாட்டில் இருந்த மின்கம்பி உரசியதால் வைக்கோல் தீப்பற்றி எரிந்தது.  மினி லாரியின் ஓட்டுநர் சாமர்த்தியமாக லாரியை நிறுத்தி தீயணைக்க முயன்றார் ஆனால் முடியவில்லை,தகவல் அறிந்த குடியாத்தம் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். உயிர் சேதம் மற்றும் வாகன சேதம் தவிர்க்கப்பட்டது.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!