திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் பழைய நுழைவு வாயில் தற்போது பயன்படுத்தப்படாமல் பூட்டப்பட்டு உள்ளது. இந்த பூட்டப்பட்ட நுழைவு வாயில் அருகில் போடப்பட்டிருந்த குப்பைகள் மற்றும் காய்ந்த புற்கள், செடிகளில் நேற்று இரவு 9 மணிக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டனர். இதனால் தீ கொழுந்து விட்டு எறிய ஆரம்பித்தது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தின் உள்பகுதியில் அனுமதியின்றி நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு அருகிலும் பரவத் தொடங்கியது. இதையடுத்து தாலுகா அலுவலகத்தில் இரவு பணியில் இருந்த அலுவலர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். சிறிது நேரம் கவனிக்காமல் விட்டிருந்தால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள், டிரான்ஸ்பார்மர் போன்றவற்றிலும் தீ பரவி இருக்கும். தாலுகா அலுவலக ஊழியர்களின் உடனடி நடவடிக்கையால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. தாலுகா அலுவலக வளாகத்தை டாக்ஸி ஸ்டாண்டு போல் இரவு நேரத்தில் கார்களை நிறுத்தி வைப்பதை தடுப்பதற்கு தாசில்தார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.