தமிழகம்

பெங்களூருவிலிருந்து காட்பாடி நோக்கி வந்த ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த சிஆர்பிஎப் வீரர் கைது

169views
பெங்களூர் அடுத்த அஹார பகுதியை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் தனது 10-வயது மகளுடன். பெங்களூரிலிருந்து விஜயவாடா செல்லும் விரைவு ரயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்தார்.  இவர்களுக்கு எதிரில் 38 – வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவன் பயணம் செய்து  இருந்தான்.  இந்த ரயில் ஜோலார்பேட்டையை தாண்டி காட்பாடி நோக்கி செல்லும் எதிரில் உள்ள பெண்ணிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளான்.  இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சல் போட அருகில் இருந்த பயணிகள் அவனை நன்றாக கவனித்து பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் ஒப்படைத்தனர்.  காட்பாடிக்கு ரயில் வந்ததும் ரயில்வே காவல்துறையினர் அவனை பிடித்து சம்பவம் நடந்த எல்லையான ஜோலார்பேட்டை இருப்பு பாதை காவலர்களிடம் ஒப்படைத்து அவனை கைது செய்தனர்.
அவனை கைது செய்து காவலர்கள் அழைத்து செல்லும்போது போட்டோ எடுத்த செய்தியாளர்களை மிரட்டி உள்ளான்.  மதுபோதையில் இருந்த அவன் யார்? என்று காவல்துறை விசாரித்தபோது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் நாய்க்க நேரி பகுதியை சேர்ந்த பெருமாளின் மகன் சுரேஷ் (38) என்பதும், இவன் பெங்களூரிலுள்ள சிஆர்பிஎப் வீரராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.  கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை செய்துவருகின்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!