தமிழகம்

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு

61views
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே ஏர்வாடி தர்ஹா 849 ஆம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது.  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே ஏர்வாடி  மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லாஹ்  பாதுஷா நாயகம் சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா மே 21ல் மவ்லீது ஷரீப், மே, 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து சந்தனக்கூடு திருவிழா ரத ஊர்வலம் ஜூன் 12 மாலை துவங்கி ஜூன் 13 அதிகாலை அதிகாலை தர்ஹா வந்தடைந்தது. அங்கு உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனைக்கு பின் மக்பராவில் சந்தனம் பூசப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று மாலை அஸர் தொழுகைக்கு பின் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடைந்தது. இதையொட்டி, பக்தர் களுக்கு தப்ரூக் வழங்கப்பட்டது.
செய்தியாளர் : காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!