தமிழகம்

இணையவழி வங்கி பரிவர்த்தனைகள் குறித்த கருத்தரங்கம்

46views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் மற்றும் கல்லூரி உள் தர உறுதி செல் இணைந்து இணையவழி வங்கி பரிவர்த்தனைகள் குறித்த கருத்தரங்கம் 09.04.2025 அன்று நடைபெற்றது. கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் நாசர் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக காளையார்கோவில், நிதி கல்வி மையம், ஒருங்கிணைப்பாளர், கவிபிரபா கலந்துகொண்டு இணையவழி வங்கி பரிவர்த்தனை முறைகள் மேற்கொள்ளும் முறைகள் குறித்தும், பாதுகாப்பான முறையில் இணையவழி வங்கி பரிவர்த்தனை செய்வதின் அவசியம் குறித்தும் பேசினார். நிகழ்வில் வணிகவியல் கணிப்பொறி பயன்பாடு மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இறுதியாக உதவிப்பேராசிரியர் கொங்கேஸ்வரன் நன்றி கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!