தமிழகம்

DLR கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘பதிப்பியல்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

56views
ஆகஸ்ட் 18, 2023 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கத்தில் உள்ள DLR கலை & அறிவியல் கல்லூரியின் மாணவ மாண்வியர்களுக்கு ‘பதிப்பியல்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் மலர்க்கண்ணன் பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் கவிஞர் க.மணிஎழிலன் அவர்கள் ‘பதிப்பியல்’ பற்றி இரண்டு மணி நேரம் கருத்தரங்க உரையாற்றினார்.

பதிப்பகம் என்றால் என்ன?, ஏன் பதிப்பகம் மூலம் நூல்களை பதிப்பிக்க வேண்டும், ஐ.எஸ்.பி.எண். என்றால் என்ன? அது எதற்கு பயன்படுத்துகிறோம்? போன்ற பல பயனுள்ள தகவல்களை மாணவ-மாணவியர்களுக்குச் சொல்லி புரியவைத்தார். விரைவில் மாணவர்களும், பேராசிரியர்களும் புத்தகம் வெளியிடப் போவதாக கூறினார்கள். கல்லூரி முதல்வர் அவர்கள் மிகச் சிறந்த வகுப்பினை எடுத்துள்ளீர்கள் என்று வெகுவாக நன்றி பாரட்டினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!