தமிழகம்

காட்பாடி வழியாக வேலூர் வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

144views
வேலூரில் நாளை மாலை நடைபெறும் திமுகவின் பவளவிழா கலந்துகொண்டு உரையாற்ற வருகை தந்த திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று சனிக்கிழமை ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இரவு 8.45 மணிக்கு காட்பாடி ரயில்நிலையத்திற்கு வருகை வந்து கார் மூலம் வேலூர் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள அனுகுலாஸ் ஓட்டலில் இரவு தங்கி காலை வேலூரில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பின்பு மேல்மொணவூரில் இலங்கைவாழ் தமிழர்களுக்கு கட்டப்பட்ட குடியிருப்பை திறந்துவைக்கிறார். மாலை பள்ளிகொண்டா அருகில் கட்சியின் பவளவிழாவில் கலந்துகொண்டுவிட்டு ஞாயிறுஇரவு 8.30 மணிக்கு கோவை எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை செல்கிறார்.

செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!