தமிழகம்

வாக்களிக்கும் அறிவார்ந்த மக்களாவது இதனை சிந்திக்க வேண்டும்! – தமிழ்த்தேசிய அரசியல் கூட்டமைப்புத் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் கோரிக்கை.

27views
இந்தியா இப்பொழுது வடக்கு தெற்கென்று பேசுவதில்லை. தங்களின் மாநில உரிமைகள் என சட்டம் பேசுவதில்லை.. எங்கள் மொழிக் கல்வி என யாரும் பேசுவதில்லை.. ஏழைகள் இல்லாதவர்கள் எனவும் பேசுவதில்லை.
ஆனால்.. சாதியை பற்றி பேசுகிறார்கள்?!. பகுத்தறிவை பற்றி பேசுகிறார்கள்?!. சாதனங்களை பற்றி பேசுகிறார்கள்?!.. அப்புறம் மதங்களை பூசி குளிக்கிறர்கள். கூடவே ஆணுக்கு இல்லை சலுகை. பெணுகளுக்கு மட்டுமே என்கிறிர்கள்?!  நாட்டையும் குடும்பத்தையும் மக்களின் கூட்டு வாழ்க்கையையும் ஒழித்துக்கட்டி விட்டு, பதவி சுகங்களை மட்டும் தாங்களே தங்களின் வீட்டிற்குள்ளும் நட்பிற்குள்ளும் இனத்திற்குள்ளும் மறைத்து இலவயங்களால் பூட்டி கதவை அடைக்கிறார்கள்.
இந்தியத் திருநாடு உலக அளவில் மக்கள் தொகையில் மிகப்பெரிய நாடு. அது உழைப்பையும் மானத்தையும் அடிப்படையாக கொண்ட பெரு நாடு. இங்கு ஆறுகளும் ஏரி குளங்களும் என நீர் வளமிக்க நாடு. இதில் காவிரி கங்கையென அறிவையும் மனித உழைப்பையும் தூக்கி நிற்கும் நாடு.
இங்குதான் எல்லோருக்கும் இந்த நாடும் அரசும் அரசியலும் அதன் வளங்களும் உரிமை உடையது என பேசும் மக்களாட்சி நாடு.  அதனால், ஆண்டான் அடிமை என பேச விடாத மக்களாட்சி நாடு. இங்கே எல்லா உரிமையையும் கிடைக்கும் பதவியையும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையென மாற்றி கைமாற்றி போடும் அதிகாரம் படைத்த மக்களாட்சி நாடு. ஆனால் அதையும் கெடுத்து நடப்பவர்க்கே முதன்மை என்பதுபோல.. ஒரு அடிமை எண்ணம் வேரூன்றி நடை போடுவதால்.. பலவும் நமக்கின்றி போய்க் கொண்டிருக்கின்றன.
நம் திருவள்ளுவப் பெருந்தகை சொல்லியது போல.. செய்தக்க செய்யாமையால் கெட.. செய்யக் கூடாதனவற்றை செய்வதாலும் நாடே கெடுகின்றது!
இங்கே இப்பொழுது நடக்கின்ற அனைத்தும் அதனை காக்கும் நிலையில் இல்லாமல் மறக்கடிக்கப்படுகின்றது மக்களை காக்க வந்தவர்களின் இயலாமையால்.. வாக்களித்த மக்களே மெச்சும்படி செய்ய இயலாதவர்களால்.  எப்படியாயினும் ஐந்தாண்டிற்கு ஒரு முறையென நாடாளும் மன்றத்திற்கும் மாநிலங்களின் சட்ட மன்றங்களுக்கும் என தேர்தல் நடத்தியே ஆக வேண்டும் என்பது கட்டாயமானது.
இப்பொழுது நம் நாட்டின் பாராளுமன்றத்திற்கு தேர்தல் வந்து விட்டது. ஏற்கெனவே இருந்தவர்களே இருக்க வேண்டும் என்பது உறுதி செய்ய.. ஆட்சியாளர்கள் கட்டாய இலவயங்களை தொடர்ந்து அறிவிக்க, நாடே ஏழைகள் நாடாகிய நிற்கிறது. அவர் வந்தால் வீடு கிடைக்கும்?!
இவர் வந்தால் சோறு இலவசமாக கிடைக்கும்?!
இன்னொருவர் வந்தால் .. பெண்களுக்கு ஆயிரமாயிரமாய் மாதாமாதம் கிடைக்கும்?!
வேறொருவர் வந்தாலே.. இலவசமாக பிள்ளைகளுக்கு பாடங்கள் படிக்காமலேயே.. பட்டங்கள் கிடைக்கும். என் அது கிடைக்கும் இது நடக்கும் என.. ஏராளமாக?!
எரியும் அடுப்பு காற்றுக்கு காசு தர வேண்டியதில்லை?! வரி வருமானத்தில் பங்கு கிடைக்கும் என்பன சொல்லியே.. எதுவும் நடக்காது போன நிலையில்..
இப்படியே படுத்தாலும் உட்கார்ந்தாலும் நின்றாலும் உணவகத்தில் உண்டாலூம் வாங்கும் வரிப்பணம் எல்லாம் இப்படிவீணாக்குவது என்ற எண்ணமே யாருக்கும் வந்து விடக்கூடாது என்ற மறைப்புகள் தானே இந்த இலவம் முகமூடிகள்!.
‘சுண்டைக்காய் கால் பணம்.. சுமைக்கூலியோ.. முக்கால் பணம்’ என்பது போல எல்லா இலவயங்களும் வழியெங்கும் ஒழுகலாக.. கடைசியில் நாட்டு மக்களின் நெற்றியில் கண்களில் ஒற்றிக் கொள்ள?;
இப்பொழுது.. எப்பொழுதும் போல அரசியல் தமிழ்நாட்டில் தொடர்ந்து திரைப்பட நடிகர் நடிகைகளின் புகலிடமாக எங்கும் எதிலும் போலித்தனங்கள் மலிந்து போய் விட்டன. இன்று எதிர்ப்போர்க்கு எதிர்ப்போரே நடத்தும் நாடகங்களாகின.
ஆளுங்கட்சிகள் மக்களின் வரிப் பணத்தில் அன்றாடம் விளம்பர வேடிக்கைக் காட்டுகின்றன. அடுத்தடுத்த விளம்பரத்தில் படுத்திருக்கும் ஆட்சியாளர்கள் விடியலை காணாமலே உறங்கிக் போய்விடுவது தான் இன்றைய விடியல்?!

இந்த நிலையில் இந்திய நாட்டின் உயரிய தேர்தலாக இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில் இரண்டு தலைமை தேர்தல் அதிகாரிகளின் இடம் காலியாக இருக்கின்றன.

சரியானவர்களை சரியான மக்களாக இருந்து தேர்வு செய்ய வேண்டியவர்களை எந்த சட்டமும் தடுக்க முடியாத நிலையில் மக்கள் இருப்பது சரியல்ல..
மக்களை அறியாமையில் வைத்தே வாக்குகளை தங்களுக்குள் பறித்துக் கொள்ள நினைக்கும் நினைப்புகளை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே நம் வேண்டுகோள். அதற்கு ஒரு விளக்கமே இந்த தேர்தல் என்ற திரவுகோல்.
இனியாவது இந்த நாட்டையும் நம் தமிழ் நிலத்தையும் ஆள புதியவராகள் வர வேண்டும். அதற்கான நல்ல முயற்சியாக நாங்கள் சிலர் சேர்ந்து புதிதாக தமிழ்த்தேசிய அரசியல் கூட்டமைப்பினை உருவாக்கியுள்ளோம். எங்களுக்கு தமிழ் நாடும் தமிழ்நாட்டு மக்களும் என்ற எல்லைகளை நிறைவு செய்வதோடு இந்தியம் என்ற பரந்த நில பரப்பையும் தமிழர் நலத்தையும் எதிர்காலத்தையும் பாது காத்து நம் வளர் தலைமுறைகள் உயர்வடையச் செய்ய நல்ல அளவு கோலினை வகுக்கும் நேர்மை மிக்க திட்டங்கள் பல உள்ளன. அதனை செய்ய நம் தமிழக வாக்காள பெருமக்கள் துணை நிற்க வேண்டும் என கைகளை நீட்டி அழைக்கின்றோம்! இதன் வழியாக நம் தமிழ்நாட்டின் உயர் புகழ் மீண்டும் தலை நிமிர்ந்து நடக்கும் என்பதை உறுதி செய்ய நிற்கின்றோம்!
வாழ்க தமிழ்நாடு! வளம்பல பெரூக.. உயரட்டும் நம் உழைப்பும் செல்வ வளங்களும் உலக நோக்கோடு!
எமது அணி வெற்றி கொள்ள வாக்களிக்க வேண்டுகின்றோம் இரு கரங்கூப்பி!..
இப்படிக்கு
பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர். தமிழ்த் தன்னுரிமை கட்சி.
தலைவர்.
தமிழ்த்தேசிய அரசியல் கூட்டமைப்பு.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!