தமிழகம்

செய்திகள்தமிழகம்

கரும் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட ஆசிரியர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று மக்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயை தொற்றுநோயாக அறிவிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கும் நிலையில், தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுள் சிலர் உயிர் இழக்கும் சமூகங்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூரைச் சேர்ந்த சின்னராசு என்ற கணித ஆசிரியர் கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சின்னராசுவுக்கு சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் ஏற்பட்டதால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானதையடுத்து அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சின்னராசுவுக்கு கண்களில் திடீரென...
செய்திகள்தமிழகம்

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறை மூலம் பயன்பெற்ற மனுதாரர்களிடம் தொலைபேசியில் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அலுவலக வளாகத்திற்கு நேரில் சென்று, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறை மூலம் பயன்பெற்ற மனுதாரர்களிடம் தொலைபேசியில் கலந்துரையாடினார். இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 28) வெளியிட்ட செய்திக்குறிப்பு: "முதல்வரின் தேர்தல் பிரச்சாரத்தில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. சுமார் 4 லட்சம் மனுக்கள் இதுவரை இத்துறையில் பெறப்பட்டன. பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்ட வாரியாக, வகை வாரியாக பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதுவரை சுமார் 2.7 லட்சம் மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன்...
தமிழகம்

பத்மா ஷேசாத்ரி பள்ளியை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஆலோசனை! அமைச்சர் தகவல்!

பத்மா ஷேசாத்ரி பள்ளியை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெர்வித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதலாகவே பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே கல்வி பயின்று வருகின்றனர். முன்னதாக கடந்த சில மாதங்கள் முன்னர் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு கொரோனா பரவியதால் மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் பத்மா சேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்புகளின் போது ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் சம்மந்தப்பட்ட பள்ளியை தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் எனக் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பேசியுள்ள கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ‘அது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக’ கூறியுள்ளார்....
தமிழகம்

கன்னியாகுமரியில் வெள்ளப்பெருக்கு… தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தாமிரபரணி, கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் 1, சிற்றார் 2 அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. கோதையாற்றில் பாயும் வெள்ளம், திற்பரப்பு அருவியை முற்றிலும் மூழ்கடித்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள திக்குறிச்சி, குழித்துறை, மங்காடு, பரக்காணி, முஞ்சிறை, பார்திவபுரம், வைக்கலூர் போன்ற தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளிலும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளது. நாகர்கோவில் மாநகரின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கடல் அணை, ஒரே நாளில் பத்து அடி உயர்ந்து, முழு கொள்ளளவான 25 அடியை எட்டியது. அணையில் இருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனிடேய,...
தமிழகம்

மகளிருக்கு தனியாக `பிங்க்’ கலர் இலவச பேருந்துகள்!

தமிழகத்தில் மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணத்தை மு.க.ஸ்டாலினின் தலைமையிலான அரசு உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 2 வாரங்களில் பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிற நிலையில், கொரோனா நிவாரண நிதி,மாநகர பேருந்துகளில் மகளிருக்கு இலவசம், வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள், ரேசன் கடைகளில் மளிகை பொருட்கள் என பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநகர பேருந்துகளை பொறுத்த வரை விரைவு பேருந்துகள் அல்லாத பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் அனைத்து பேருந்துகளும் ஒரே நிறத்தில் இயங்குவதால் இலவச கட்டண பேருந்துகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் நடத்துனர் , பயணிகள் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனை தவிர்க்கவும் மக்களின் குறைகளை களையவும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக்...
தமிழகம்

சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக சுபோத் குமார் நியமனம்

மத்திய தொழிற் பாதுகாப்புப்படையின் தலைவராக இருக்கும் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் சிபிஐ அமைப்பின் இயக்குநராக அடுத்த இரு ஆண்டுகளுக்கு நியமித்து மத்திய பணியாளர்பயிற்சித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1985-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான சுபோத்குமார் மகாராஷ்டிரா கேடரைச் சேர்ந்தவர். இதற்கு முன் மகாராஷ்டிரா மாநில காவல் டிஜிபியாகவும் சுபோத்குமார் பணியாற்றியுள்ளார். கடந்த பிப்ரவரி3-ம் தேதி சிபிஐ இயக்குநராக இருந்த ரிஷி குமார் சுக்லா ஓய்வு பெற்று சென்றபின் கடந்த 3 மாதங்களாக இயக்குநர் இல்லாமல் சிபிஐ அமைப்பு இயங்கி வந்தது. 1988ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான குஜராத் பிரிவு அதிகாரியான பிரவீண் சின்ஹா பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டு கடந்த 3 மாதங்களாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித்...
தமிழகம்

3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் டெல்லியில் தொடங்கி 6 மாதங்களாகியும் அதனை மத்திய அரசு கண்டு கொள்ளாதது கவலையளிக்கிறது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும்.மேலும்,இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை . இதுகுறித்து ,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் நாடாளுமன்ற நடைமுறைகளைப் புறக்கணித்து அவசரம் அவசரமாகக் கொண்டு வந்த "விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைச்சட்டம் 2020", "வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் சட்டம் 2020'", "அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகிய மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் |தங்கள் போராட்டத்தைத் துவங்கி இன்றுடன் 26.5.2021) ஆறு மாத காலம் நிறைவு பெறுகிறது. இன்றளவும் போராடும்...
தமிழகம்

கருப்புப் பூஞ்சை நோய் குறித்து ஆராய வல்லுநர்கள் குழு அமைப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கரோனா பாதிப்பிலுள்ளவர்களுக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆய்வு செய்ய பல்துறை அலுவலர்கள் அடங்கிய 10-க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி முகாம்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தூத்துக்குடி வாகைக்குளம் விமானநிலையம் வந்தார். தொடர்ந்து அவர், மேலக்கூட்டுடன்காடு பகுதியில் உள்ள கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அவர், ஸ்பிக் நகர், மற்றும் சிப்காட்டில் தொழிற்சாலைகளில் தடுப்பூசி முகாம்களை தொடங்கிவைத்தார். முன்னதாக அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் கரோனா சிகிச்சைக்காக செய்யப்படுள்ள மருத்துவ கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி...
தமிழகம்

பாலியல் புகாரில் சிக்கிய PSBB பள்ளி ஆசிரியர், முதல்வர் உள்ளிட்ட 5 பேருக்கு சம்மன்!

பாலியல் புகாரில் சிக்கிய PSBB பள்ளி ஆசிரியர், முதல்வர் உள்ளிட்ட 5 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் கைதான ஆசிரியர், PSBB பள்ளி முதல்வர், நிர்வாகிகளுக்கு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. முதன்மை கல்வி அலுவலர் மற்றும் முன்னாள் மாணவி ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் .ஆசிரியர் பள்ளி நிர்வாகி உட்பட 5 பேர் ஜூன் 4 குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது படித்து வரும் மாணவிகளின் விவரங்களை வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆசிரியருக்கு எதிராக எந்த தகவலும் கொடுக்க முடியாது என தற்போதைய மாணவிகள் தெரிவித்தனர். மாணவிகள் தகவல் தர மறுப்பதால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தொடர்பு கொள்வதில் தொய்வு என்று ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
செய்திகள்தமிழகம்

நாளை முதல் இ-பதிவில் புதிய மாற்றம் !!

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இரண்டு வாரமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. எனினும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நாளை முதல் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் தடையின்றி செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், * மே 25 முதல் தொழிற்சாலை பணியாளர்கள் இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது. * மே 25 முதல் தொழிற்சாலைகளின் வாகனங்கள் இ-பதிவு செய்து கொள்ள வேண்டும். * மே 25 முதல் தொழிற்சாலைகள் இ-பதிவு செய்துள்ள வாகனங்களில் மட்டுமே பணியாளர்களை அழைத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. * தொழிலாளர்களை அழைத்து வர 4 சக்கர...
1 428 429 430 431 432 440
Page 430 of 440

Right Click & View Source is disabled.

error: Content is protected !!