ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்வுகள் என்னென்ன? இன்று அறிவிப்பு
தமிழ்நாட்டில் 14ஆம் தேதி முதல் டாஸ்மாக் திறப்பு,இ-பதிவு முறை ரத்து போன்ற தளர்வுகளுக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்திற்கு சென்று அச்சுறுத்தி வந்தது. பின்னர் ஊரடங்கு விதிக்கப்பட்டதாலும் தீவிர நடவடிக்கையின் காரணமாகவும் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதில் 2 வாரங்கள் தளவுகள் இல்லாத முழு ஊரடங்கும் அடங்கும். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், என்னென்ன தளர்வுகள் அளிக்கப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது மாவட்டங்கள் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு முறை இருக்கும் நிலையில் அந்த நடைமுறை ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் வெளிநாடு, வெளிமாநிலங்களில் வர இ பதிவு கட்டாயம் என்ற நடைமுறை...