ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்!
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக கடந்த மே மாதம் 7ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வந்த நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜூன் 21ம் தேதி சட்டப்பேரவை கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். மேலும், கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி, கலைவாணர் அரங்கத்தில் ((இன்று)) காலை 10 மணிக்கு, 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்குகிறது. புதிய அரசு பொறுப்பேற்று நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், திமுகவின் தேர்தல் அறிக்கை அறிவிப்புகளில் சில ஆளுநர் உரையில் இடம் பெறலாம் என கூறப்படுகிறது. கொரோனா தொற்றை குறைக்க தமிழ்நாடு அரசு...