தமிழகம்

செய்திகள்தமிழகம்

ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்!

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக கடந்த மே மாதம் 7ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வந்த நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜூன் 21ம் தேதி சட்டப்பேரவை கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். மேலும், கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி, கலைவாணர் அரங்கத்தில் ((இன்று)) காலை 10 மணிக்கு, 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்குகிறது. புதிய அரசு பொறுப்பேற்று நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், திமுகவின் தேர்தல் அறிக்கை அறிவிப்புகளில் சில ஆளுநர் உரையில் இடம் பெறலாம் என கூறப்படுகிறது. கொரோனா தொற்றை குறைக்க தமிழ்நாடு அரசு...
செய்திகள்தமிழகம்

ஊரடங்கு தளர்வு: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்கத்தால் கடந்த மாதம் 10ம் தேதி பேருந்து சேவை, ரயில் சேவை உள்ளிட்ட அனைத்தும் முடக்கப்பட்டது. பாதிப்பு படிப்படியாக குறைந்து தளர்வுகள் அளிக்கப்பட்ட போது, குறைந்த அளவில் ரயில்கள் இயக்கப்பட்டன. எனினும், பேருந்து சேவைக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. சுய தொழில் செய்வோர், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் செயல்பட தொடங்கிவிட்டதால் பேருந்துகள் இயங்காமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். அரசு பேருந்துகளை இயக்க வேண்டுமென்ற கோரிக்கை வெகுவாக எழுந்தது. இதையடுத்து, பேருந்துகளை இயக்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் நிபுணர்கள் குழு மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அக்கூட்டத்தில், பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்க வேண்டாமென நிபுணர்கள் குழு பரிந்துரைத்தது. இதைக் கருத்தில் கொண்ட தமிழக அரசு, பாதிப்பு வாரியாக மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தனித்தனியாக...
செய்திகள்தமிழகம்

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்!

சென்னையில் இன்று காலை 06:30 மணி முதல் இரவு 09:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 09.00 மணி முதல் காலை 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை 5 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் இரயில்கள் இயக்கப்படும். தேவையின் அடிப்படையில் பின்னர் நேர மாற்றம் செய்யப்படும் என்றும், பயணிகளின் பாதுகாப்பிற்காக அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் அடிக்கடி கிருமிநாசனி மூலம் சுத்தம் செய்யப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடைமேடையில் காத்திருக்கும் போதும் ரயிலில் பயணிக்கும் போதும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதுடன் 6 அடி இடைவெளியை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்....
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை: வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திட்டவட்டம்

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், தனியார் அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட 30 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்பெற்றுக்கொண்டார். அதன்பின்பு செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது ''தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது. தனியார் அமைப்பு வழங்கியுள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள், மாவட்டத்தில் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். கரோனா 3-ம் அலையை எதிர்கொள்ளும் வகையில் உதகை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக 80 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. கரோனா தொற்றை தடுக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும், மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என்றார். அப்போது, மாவட்டவருவாய் அலுவலர் எஸ்.நிர்மலா, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை...
செய்திகள்தமிழகம்

இன்று புதிய தளர்வுகள் அறிவிப்பு… தமிழகம் வர இருக்கும் 3 லட்சம் தடுப்பூசிகள்!

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு அமலில் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அறிவிப்பது குறித்து நேற்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்ற நிலையில் இன்று பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக கரோனா பாதிப்பு அதிகம் உள்ள எட்டு மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மறுபுறம் தமிழகத்தின் பல பகுதிகளில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. முன்பை விட தற்பொழுது கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவதோடு நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் பூனேவில் இருந்து மேலும் மூன்று லட்சத்து 14 ஆயிரத்து 110 கோவிஷீல்டு தடுப்பூசிகள்...
செய்திகள்தமிழகம்

கொடைக்கானல் பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் மலர்கள் யூடியூப் மூலம் ரசிக்க தோட்டக்கலைத்துறை ஏற்பாடு

கரோனா காரணமாக கொடைக் கானலில் 2-வது ஆண்டாக கோடைவிழா, மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து பூங்காக்களில் பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டு ரசிக்க தோட்டக்கலைத்துறை சிறப்பு ஏற்பாடு செய்து இதற்கென யூடியூப் சேனலை தொடங்கியுள்ளது. இதில் இந்த ஆண்டு பூங்காக்களில் பூத்துக் குலுங்கும் பூக்களை வீட்டி லிருந்தபடியே கண்டு ரசிக்கலாம். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனில் சுற்றுலாப் பயணிகள் வருகை களைகட்டும். சுற்றுலாப் பயணி களை மகிழ்விக்க அரசு கோடைவிழா, மலர் கண்காட்சி ஆகியவற்றை ஆண்டுதோறும் மே இறுதி வாரத்தில் நடத்தும். இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு கோடை சீசன் தொடங்கு வதற்கு முன்னரே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கோடைவிழா, மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டன. இதை யடுத்து இந்த...
செய்திகள்தமிழகம்

கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்!!

தமிழக அரசின் கல்வி டிவியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளன.தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் நடப்பாண்டுக்கான வகுப்புகளை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்களை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்குவதையும் தொடங்கி வைக்கிறார்....
செய்திகள்தமிழகம்

மோர்தானா அணையில் இன்று தண்ணீர் திறப்பு பாசன கால்வாயை சேதப்படுத்தும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை

மோர்தானா அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக இன்று தண்ணீர் திறக்கப்படவுள்ளது. பாசன கால்வாயை சேதப்படுத்துபவர்கள், மோட்டார் மூலம் தண்ணீரை திருடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரித்துள்ளார். வேலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக மோர்தானா அணை உள்ளது. தமிழக- ஆந்திர எல்லையில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே 11.50 மீட்டர் உயரத்துடன் கட்டப்பட்டுள்ள அணையில் சுமார் 260 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணையில் தற்போது 11.40 மீட்டர் உயரத்துக்கு நீர் இருப்பு உள்ளது. எனவே, பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஜூன்-19) காலை திறந்து வைக்கவுள்ளார். அணை திறக்கப்படுவதால் வலதுபுற பிரதான கால்வாய் வழியாக 12 ஏரிகளுடன் 25 கிராமங்களில் உள்ள சுமார் 3,937...
செய்திகள்தமிழகம்

புகழ்ந்து பேச, திட்டுவது போல் நடிக்க ரூ.5000- ‘பப்ஜி’ மதன் குறித்து வெளியாகும் பகீர் தகவல்

பப்ஜி மதனை கைது செய்துள்ள காவல்துறையினர், அவரது சொகுசு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியுள்ளன. 'யூ டியூப்' சேனல் நடத்தி வரும் மதன் என்பவர், தடை செய்யப்பட்ட 'பப்ஜி' விளையாட்டுகளின் வாயிலாக சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாகவும், பெண்களிடம் ஆபாசமாக பேசுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, 'பப்ஜி' மதன் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் தலைமறைவாகியிருந்த அவரை இன்று காலை தருமபுரியில் போலீசார் கைது செய்தனர். பப்ஜி மதனை கைது செய்துள்ள காவல்துறையினர், அவரது சொகுசு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியுள்ளன. தம்மை புகழ்ந்து வீடியோ வெளியிடுவோருக்கு ரூ.5,000 மதன் கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தம்மை புகழ்ந்து பேசியதற்கும் உடந்தையாக இருந்ததற்கும் பெண் ஒருவருக்கு ரூ.5 லட்சம் மதன் கொடுத்ததாகவும் தகவல்...
செய்திகள்தமிழகம்

சிவசங்கர் பாபாவை தொடர்ந்து சுஷில் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவி சுஷ்மிதா கைது!!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில், அந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை போலீசார் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி அம்பிகா, அவரை ஜூலை 1-ந் தேதி வரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தற்போது அந்த பள்ளியின் முன்னாள் மாணவி சுஷ்மிதா என்பவரிடம் சுமார் 4 மணி நேரம் நடத்திய விசாரணைக்குப் பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை கைது செய்துள்ளனர். ஏற்கனவே இன்று காலை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. விஷ்ணு விசாரணை நடத்தினார். அவர் விசாரணை மேற்கொண்டிருந்த போதே, இரண்டு தனிப்படை...
1 422 423 424 425 426 441
Page 424 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!