ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து மீண்டும் தமிழகத்துக்கு பேருந்துகள் இயக்கம்
ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு நேற்று முதல் மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. கரோனா 2-வது அலை பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஆந்திராவில ்இருந்து தமிழகம், கர்நாடக மாநிலங் களுக்கு 4 மாதங்களுக்குப் பிறகு பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆந்திராவில் இருந்து திருப்பதி, கடப்பா, சித்தூர், விஜயவாடா, பலமனேர், குப்பம், உள்ளிட்ட ஆந்திராவின் பல்வேறு நகரங்களில் இருந்து தமிழகத்தின் சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், மற்றும் புதுச்சேரி மாநிலத்துக்கு ஆந்திர அரசுப் போக்குவரத்துக் கழகமும், தமிழக அரசு போக்குவரத்துக் கழகமும் பொது போக்குவரத்தை தொடங்கி உள்ளன. கர்நாடகா பேருந்துகள்... கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவியதால் இரு மாநிலங்களுக்கு...