செப்டம்பர் இறுதிக்குள் காவிரியில் 64.62 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும்: ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்
காவிரியில் கடந்த 3 மாதங்களாக தரப்படாமல் உள்ள நிலுவை நீர் மற்றும் செப்டம்பர் மாதத்தின் பங்கு உள்பட 64.62 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியது. ஆனால், கர்நாடகம் வழங்குவதாக ஒப்புக்கொண்ட 7 டிஎம்சி தண்ணீரை ஏற்க தமிழகம் மறுத்துவிட்டது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 13-ஆவது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் சார்பில் பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலர் டாக்டர் சந்தீப் சக்úஸனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்ரமணியன் மற்றும் கர்நாடகம் சார்பில் நீர்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் ராகேஷ் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காவிரியில் தமிழகத்துக்கு இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கர்நாடகம் 86 டிஎம்சி...