தமிழகம்

தமிழகம்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்: மனு தாக்கல் இன்று தொடக்கம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. செப். 15-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் 9 மாவட்டங்களுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு அக். 6, 9-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இன்று காலை 10 முதல்மாலை 5 மணி வரை மனுக்கள் பெறப்படும். மனுக்களை தாக்கல்செய்ய வரும் 22-ம் தேதிகடைசி நாளாகும். மனுக்களை வரும் 25-ம் தேதி வரை திரும்பப் பெறலாம். அன்று...
தமிழகம்

நீட் தேர்வுக்கு எதிரான செயல்பாடுகளில் முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெறுவார்: தூத்துக்குடி எம்.பி. கனிமொழி நம்பிக்கை

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், அகரமேல் மற்றும் மேல்மணம்பேடு ஆகிய ஊராட்சிகளில், 2017-18-ம் ஆண்டுக்கான, மாநிலங்களவை உறுப்பினர் நிதியிலிருந்து தலா ரூ.7 லட்சம் வீதம் ரூ.35 லட்சம் செலவில் 5 உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்விளக்குகளை நேற்று தூத்துக்குடி எம்.பி. கனிமொழி செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். இந்நிகழ்வில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவுகளை நனவாக்குகிற, மக்களுக்கு அளித்த வாக்குறுதியைநிறைவேற்றக் கூடிய, தொலைநோக்கு பார்வை கொண்ட ஆட்சியாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் நீட் தேர்வை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாம் எதிர்ப்பை பதிவுசெய்திருக்கிறோம். எதிர்க்கட்சியாக இருந்தபோதும்...
தமிழகம்

விதைச்சான்று துறையை சென்னைக்கு மாற்ற எதிர்ப்பு : விதைகளுடன் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு!!

கோவையிலிருந்து விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றிதழ் துறையின் தலைமையிடத்தை சென்னைக்கு மாற்றக்கூடாது என்று தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தலைவர் பழனிச்சாமி விதைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். கோவையில் இயங்கிவரும் விதைச் சான்று மற்றும் அங்கக சான்றிதழ் வழங்கும் துறையின் தலைமை இடத்தை சென்னைக்கு மாற்றுவதாக வேளாண்மைத் துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தலைவர் பழனிச்சாமி தலைமையில் விவசாயிகள் விதைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. இம்மனுவில் இச்சான்று வழங்கும் தலைமை இடத்தை சென்னைக்கு மாற்றினால் கொங்கு மண்டலத்தில் இயற்கை விவசாயம் முடக்கப்படும் அபாயம் ஏற்படும் என்றும், சென்னைக்கு விதைச்சான்று துறையின் தலைமை இடத்தை மாற்றுவதால் விவசாயிகள் அதன் மூலம் பல்வேறு போக்குவரத்து சிக்கல்களை நேரிடக் கூடும் என்பதாலும் இந்நடவடிக்கையை கைவிட...
தமிழகம்

அரசுப்பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40%-ஆக உயர்வு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

அரசுப் பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 40%ஆக உயர்த்தியுள்ளது தமிழ்நாடு அரசு. முன்னதாக இது 30% என்றிருந்தது. மாற்றத்தை ஊக்குவிப்பதில் பாலின சமத்துவம் முக்கியம் என்பதை அடிப்படையாகக் கொண்டு, நேரடி நியமனம் மூலம் நடைபெறும் அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்குரிய சட்டதிருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புடன் சேர்த்து, 'அரசுத்துறையிலுள்ள பணியிடங்கள், மாநில பொதுத்துறை நிறுவனங்களிலுள்ள பணியிடங்கள் ஆகியவற்றில் தமிழக இளைஞர்களே 100 சதவிகிதம் நியமனம் செய்யப்படுவர். அதற்கான முன்னெடுப்புகள் தொடங்கப்படும். மேலும், அனைத்து தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும்' என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று, மனித வள மேலாண்மைத்துறையின் மானிய கோரிக்கை தொடர்பான விவாதம்...
தமிழகம்

தமிழகத்தில் 4 கோடி தடுப்பூசிகள் செலுத்தி இமாலய சாதனை!

தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரியில் இருந்து இன்றுவரை தமிழகத்தில் 4 கோடி பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இமாலய சாதனை படைத்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி 28 லட்சம் பேருக்கு இன்று ஒரே நாளில் தமிழ்நாடு அரசு சார்பாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 185370 பேருக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பாக அரசு மருத்துவமனைகள் மூலம் 3,79,65,592 பேருக்கும், தனியார் மருத்துவமனைகள் மூலம் 2280173...
தமிழகம்

சென்னையில் ‘மெகா’ தடுப்பூசி முகாம் லட்சக்கணக்கானோர் பலன்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்த, 'மெகா' தடுப்பூசி முகாம்களில், ஏராளமானோர் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இது போன்ற, தொடர் முகாம்களின் மூலம், சென்னையில், மிக விரைவில், 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.கொரோனா மூன்றாம் அலை பரவலை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம் முழுதும் நேற்று 'மெகா' கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.சென்னை மாநகராட்சி சார்பில், 1,600 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டிருந்தது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி, கல்லுாரிகள், பூங்காக்கள், விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட, மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. எங்கெல்லாம், தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக, இணையதள முகவரியும் வழங்கப்பட்டது. மேலும்,...
தமிழகம்

4 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்திட்டம் விரைவில் தொடக்கம்: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

``தமிழகத்தில் 4 ஆயிரம் மெகாவாட் சூரியஒளி மின்திட்டம் விரைவில் தொடங்கப்படும்' என்று, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வளர்ச்சி திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம் பெருமாள்புரம் சாராள் தக்கர் கல்லூரியில் நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, ஞானதிரவியம் எம்பி, எம்எல்ஏக்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், பழனி நாடார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் சட்டப்பேரவையில் நடைபெற்று முடிந்த மானிய கோரிக்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக வரலாற்றில் ஒரே ஆண்டில் 1 லட்சம் விவ்சாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கக் கூடிய வரலாற்று முக்கியத்துவமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். இதுவரை 4,52,777 விவசாயிகள் 18 ஆண்டுகள்...
தமிழகம்

இன்று நீட் தேர்வு.. தமிழகத்தில் 1.10 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.. முதல்முறையாக தமிழில் தேர்வு!

கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நீட் தேர்வானது இன்றைய தினம் நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் 1.10 லட்சம் பேர் எழுதுகிறார்கள். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு தேசிய அளவில் நடத்தப்படுவதால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு பொசுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருந்து வருகிறது. மேலும் இந்த தேர்வால் தங்கள் மருத்துவ கனவு கலைந்து போனதால் அரியலூர் அனிதா உள்பட ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டார்கள். எனவேதான் நீட் தேர்வை உயிரைக் குடிக்கும் அரக்கனாக பார்க்கிறார்கள். உலகில் கொரோனாவால் 22.50 கோடி பேர் பாதிப்பு - அமெரிக்காவில் 70 ஆயிரமாக குறைந்த கேஸ்கள்! நீட் தேர்வு நடத்தப்படுவது ஒரு புறம் இருந்தால்...
தமிழகம்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் – வானிலை மையம்

தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக ‌‌‌‌‌தமிழகத்தின் சில மாவட்டங்களில், 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மற்றும் சேலம் மாவட்டங்களில் நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மத்திய வங்கக்கடல்,...
தமிழகம்

செப்., 11 ‘மகாகவி நாள்’: முதல்வர் அறிவிப்பு

மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் செப்.,11 அன்று மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: மகாகவி பாரதியாரின் நினைவுநாளான செப்.,11 அன்று அரசின் சார்பில் ஆண்டுதோறும் 'மகாகவி நாளாக' கடைபிடிக்கப்படும். இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதை போட்டி நடத்தி,'பாரதி இளங்கவிஞர் விருது' ஒரு மாணவர் மற்றும் மாணவிக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகையுடன் வழங்கப்படும்.தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதியாரின் பாடல்கள் மற்றும் கட்டுரைகளை தொகுத்து 'மனதில் உறுதி வேண்டும்' என்று புத்தகமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சுமார் 37 லட்சம் பேருக்கு ரூ.10 கோடி செலவில் வழங்கப்படும் .பாரதியாரின் வாழ்க்கை மற்றும் அவரின் படைப்புகள் குறித்து ஆய்வு செய்த அறிஞர்களான மறைந்த பெ.தூரன்,...
1 406 407 408 409 410 441
Page 408 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!