செய்திகள்

தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமனத் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்; மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசை அஞ்சல், முகமதியா நகரில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள 2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமனத் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு தமிழ், கணக்கு, தமிழ் தகுதித் தேர்வு ஆகிய பாடங்களுக்கு நேரடி பயிற்சி வகுப்புகளாக அலுவலக வளாகத்தில்...
தமிழகம்

சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் பக்த ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  வியாழக்கிழமையாகசாலை பிரவேச பூஜை ஆரம்பம் செய்யப்படும்.  வெள்ளிக்கிழமை காலை கோ- பூஜை, 3வது கால பூஜை பின்காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும்.  ஏற்பாடுகளை ஸ்ரீபக்த ஆஞ்சநேய சுவாமி பக்த சபாவினர் செய்துவருகின்றனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

ஒசூர் அருகே தளியில் தமுமுக வின் விழி அணி மற்றும் JCI இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான இலக்கு அமைத்து கற்றல் பயிற்சி முகாம்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மனிதவள மேம்பாட்டு அணியான விழி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான “இலக்கு அமைத்து கற்றல்” பயிற்சி முகாம் இன்று 20.11.23 தளியில் உள்ள Shree Annapoorneshwari Public School ல் நடைபெற்றது. விழி அணியின் மாவட்ட செயலாளர் முஹமத் சுஹேப் ஒருங்கிணைப்பில் JCI ன் மண்டல பயிற்சியாளர்கள் JC.HGF.மமதா.J மற்றும் JFM தியாகராஜன்.K ஆகியோர் மாணவர்களிற்கு பயிற்சி அளித்தனர். இம்முகாமில் மாணவர்களை...
தமிழகம்

ஒசூரில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஆலோசனை கூட்டம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்,சாரதா மஹால், ஓசூரில் மாவட்ட தலைவர் N.ஷாநவாஸ் தலைமையில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் வேலூர் மண்டல தலைவர் Y.பையாஸ் அஹ்மத் மற்றும் வேலூர் மண்டல செயலாளர் H.அஸ்கர் அலி ,சமூக ஊடக அணி வேலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் B.ஷபீர் அகமத், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.  மாவட்ட பொது செயலாளர்...
தமிழகம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைமை அலுவலகக் கட்டத்தினை திறந்து வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு படிப்பிற்க்கான கல்வி தொகையினை வழங்கினார் ‘லெஜண்ட்’ சரவணன்

'லெஜண்ட்’ சரவணன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைமை அலுவலகக் கட்டடத்தினை திறந்து வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்விக்கான ஊக்க தொகையினை வழங்கினார்....
தமிழகம்

வேலூரில் அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா

வேலூர் மாவட்ட 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார காட்பாடியில் நடந்தது. இதில் பயனாளிகளுக்கு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், எம்எல்ஏக்கள் கார்த்திகேயன், நந்தகுமார், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பாபு, 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா மற்றும் பலர் உள்ளனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வள்ளிமலை மற்றும் ரத்தினகிரி முருகன் கோயிலில் கோலாகலமாக நடந்த திருக்கல்யாணம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமை முருகன், தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இதில் ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.ஏற்பாடுகளை செயல் அலுவலர் திருநாவுக்கரசு, மேலாளர் ராஜ்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.  அதேப்போல் வேலூர் அடுத்த இரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் முருகன் தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.  ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை , செயல்...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் மாநகராட்சி சுகாதார துறை சார்பில் உலக டாய்லெட் தினம்

வேலூர் மாநகராட்சி ஆணையர் பானுமதி உத்தரவின்படி 1-வது மாநகராட்சி மண்டலத்தில் உலக டாய்லெட் தினத்தை முன்னிட்டு டாய்லெட் குறித்த விழிப்புணர்வை காட்பாடி சித்தூர் பஸ் நிலையம், மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் தூய்மை பணியாளர்கள் செய்தனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

இரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் விழா

வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலில கந்தர் சஷ்டி முன்னிட்டு சூரபத்மனை, முருகன் வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடந்தது.  பின்பு ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது. ஏரளமான பக்தர்கள் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர்.  ஏற்பாடுகளை பரம்பரை தர்மகத்தா பாலமுருகன் அடிமை சுவாமிகள், செயல் அலுவலர் சங்கர் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
1 48 49 50 51 52 584
Page 50 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!