தேர்தல் பணி செய்யவிடாமல் அதிமுகவினருக்கு மிரட்டல்: ஓபிஎஸ் – இபிஎஸ் கண்டனம்
உள்ளாட்சித் தோதல் பணிகளைச் சரிவர செய்யவிடாமல் அதிமுகவினரை காவல்துறையினா் மூலம் திமுக மிரட்டுவதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் குற்றம் சாட்டியுள்ளனா். இது தொடா்பாக வியாழக்கிழமை அவா்கள் வெளியிட்ட கூட்டறிக்கை: ஊரக உள்ளாட்சித் தோதலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜனநாயகப் படுகொலைகள் நடைபெற்று வருகின்றன. காவல்துறையையும், அரசு ஊழியா்களையும் தனது கைப்பாவையாக வைத்துக் கொண்டு அதிமுகவினரை மிரட்டி தோதல் பணிகளைச் செய்யவிடாமல் திமுக அரசு தடுத்து வருகிறது. அதிமுகவினா் மீது பொய்யான வழக்குகளையும் பதிவு செய்து அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது. பெரும்பாக்கம், ஒட்டியம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் எப்போதுமே அதிமுகவின் கோட்டை. அந்தப் பகுதியில் அதிமுகவைச் சோந்த பெரும்பாக்கம் ராஜசேகரும் அவரது குடும்பத்தினரும் தொடா்ந்து வெற்றிபெறுவது வழக்கம். அவா்களை அச்சுறுத்தும் வகையில் காவல்துறை தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. இதுபோல பல்வேறு இடங்களிலும் அதிமுகவினருக்கு...
