சிறுகதை

சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் -தொடர்: பகுதி -16

பெண் பார்க்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது செழியனும் அவனது மனைவியும் வீட்டிற்குள் வருகிறார்கள். தேவி உள்ளே சென்று கவிதாவின் மூத்த மகளை அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள். லட்சுமி சமையலறையில் வருபவர்களுக்கு பலகாரமும் ,தேநீரும் தயார் செய்து கொண்டிருக்கிறாள். கவிதாவின் தந்தை வருபவர்களை உபசரிக்க வாசலிலேயே நின்று கொண்டிருக்கிறார். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண் பார்க்க வீட்டில் நுழைகிறார்கள். வருபவர்களை சரவணனும், செழியனும் வரவேற்று அவர்களை உட்கார வைக்கிறார்கள். அவர்களுக்கு தேனீரும், பலகாரமும்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி- 15

கவிதாவின் மூத்த மகள் பனிரெண்டாம் படிக்கும் நிலையில், அவளது இளைய மகள் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். மூன்றாவது மகனோ ஆறாவது படித்த நிலையில் இளைய மகளுக்கும், மகனுக்கும் படிப்பில் அந்தளவு நாட்டம் இல்லை. மூத்த மகளை பனிரெண்டாம் வகுப்புவரை படிக்க வைத்துவிட்டு திருமணம் செய்து விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாள். அப்போது இந்த பூச்சூட்டு விழாவிற்கு வந்த உறவினர் ஒருவர் லட்சுமியிடம் தன் மகனுக்காக கவிதாவின் மகளை பெண்பார்க்க கேட்கிறார்கள்....
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி -14

அடுத்த நாள் காலை விடிகிறது. வழக்கம்போல் எல்லா வேலைகளையும் செய்து முடிக்கிறாள் லட்சுமி. மாலையில் நடக்கவிருக்கும் ஏழாம் மாதம் பூச்சூட்டு விழாவுக்காக வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. தன் மகள் நடத்துவதால் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து வேலை பார்க்கிறாள். தாய் வாங்கி வந்த பொருட்களை தான் வாங்கியது போல் வீட்டிற்கு எடுத்து வருகிறாள் கவிதா. அவளும் ,லட்சுமியும் சேர்ந்து பக்கத்தில் உள்ள உறவினர்களை நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்கள்....
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்- தொடர் : பகுதி – 13

ஒரு நாள் அதிகாலை வாங்கி வந்த பசும்பாலை காய்ச்சுவதற்கு எடுக்கிறாள். தேவி அதை எடுத்ததும் லக்ஷ்மி அருகில் வந்து "தேவி இது கவிதா வீட்டிற்காக வாங்கி வந்தேன்" நமக்கு வாங்கி வந்து கொடுக்கிறேன். பின்பு பால் காய்ச்சி கொள் என்று சொல்ல தேவி முகம் மாறுகிறது. இதேபோல் தேவிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்து, கவிதாவிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நாளடைவில் தன் மகளையும், பேரக் குழந்தைகளையும் முதன்மையாக பார்க்க தொடங்குகிறாள்....
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி -12

இரண்டு நாட்கள் ஆனது, கவிதா அவளுக்காக பார்த்த வீட்டில் குடியேறினாள். லட்சுமியும் அங்கு சென்றிருக்க அப்போதுதான் தன் மகளை பார்க்கிறாள். பார்த்ததும் மகளை கட்டியணைத்தாள். "எப்படி இருக்க மா ? எவ்வளவு நாளாச்சு உன்ன பார்த்து, இப்படி துறும்பா போயிருக்க" , என்று கேட்க "நான் என்ன பண்ணுவது, எனக்கு மூன்று குழந்தைகள் அவர் போய் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிறது." "என்னது அவர் இல்லையா?" அப்போதுதான் லட்சுமிக்கு தெரிகிறது...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 11

சட்டென்று திரும்பிய கவிதா, தம்பி செழியனை பார்க்கிறாள். கவிதாவைப் பார்த்த செழியன் கண்களில் நீர் வடிய எப்படி இருக்க அக்கா??? என்று கேட்க, "எனக்கு என்ன நான் நன்றாக இருக்கிறேன்" என்று சொல்கிறாள். "என்ன ஆச்சு ? இது உன் மகளா" என்று கேட்கிறான். "ஆமாம் இவள் என் மகள் தான் மூத்தவள் ." "என்ன இவளுக்கு உடல்நிலையில் ஏதாவது சரி இல்லையா" என்று கேட்க, "ஆமா இவளுக்கு இதயத்தில்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்-தொடர் : பகுதி-10

இரண்டு நாட்களாகியும் லட்சுமி வீட்டில் அமைதியை தொடர்ந்தாள். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சரவணன் மற்றும் செழியன், "வீட்டில் இப்படி இருக்காதே....உனக்கென்ன உன் மகளை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் அப்படித்தானே...உன் இஷ்டம் போல் எது வேண்டுமோ செய். நாங்கள் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அதனால் நீ சகஜமான நிலையில் இரு" என்று கூறிவிட்டு சென்றனர். சந்தோஷம் தாங்க முடியாமல் லட்சுமி முகத்தை கழுவிவிட்டு அவளுடைய தோழிகளை பார்க்க தெருவிற்கு...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்-தொடர்: பகுதி-9

மறுநாள் அதிகாலை எழுந்த தேவி வாசலை சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள். அப்போது எதிர்வீட்டில் உள்ள செழியனின் மாமி வந்து "தேவி..உன்னிடம் கோலமாவு இருக்கிறதா? இருந்தாள் இந்த கிண்ணத்தில் கொண்டு வா... " என்று சொல்கிறாள். "இதோ! எடுத்துட்டு வரேன் சித்தி" என்று கூறிவிட்டு உள்ளிருக்கும் டப்பாவிலிருந்து எடுத்து வந்து தருகிறாள். கோலமாவு வாங்கிய செழியனின் மாமி எ"ன்ன ஆச்சு தேவி??? நேற்றிரவு வீட்டில் ஏதேனும் பிரச்சனையா??? அவ்வளவு சத்தமாக இருந்தது....
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் -தொடர் : பகுதி- 8

இவர்களுடைய அன்பான வாழ்க்கை சிறிது காலம் அப்படியே நகர்கிறது..... எப்பொழுதும் போல தேவி காலையில் எழுந்து மாமியார் லட்சுமிக்கு துணையாக சமையலறையில் வேலை பார்க்கிறாள். அப்போது லக்ஷ்மிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் எதிர்திசையில் இருப்பவர் லட்சுமியின் மூத்த மகள் இவள் " காதல் திருமணம் செய்து அப்பா, அம்மா சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினாள்" அதிலிருந்து இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை.... இது தெரியாத லட்சுமி தொலைபேசியை...
இலக்கியம்சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி-7

செழியன் இருக்கும் அறையில் நுழைந்த தேவி பயத்துடன் படபடப்புடன் இருந்தாள். செழியன் இங்கே வா வந்து உட்காரு என்று சொல்லி அவள் கைகளைப் பிடித்து நான் இருக்கிறேன் என்ற பாதுகாப்பு உணர்வை கொடுத்து பேசத் தொடங்குகிறான். உனக்கு என்ன பிடிக்கும் என்று பேச தொடங்கினான் செழியன். நேரம் கழிந்தது. இருவருக்கும் இனிமையான இரவாக அமைந்தது. அடுத்த நாள் காலை தேவி குளித்துவிட்டு காபி எடுத்துட்டு வந்து செழியனை எழுப்பினாள். தூங்கி...
1 5 6 7 8 9
Page 7 of 9
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!