தமிழகம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தை முதல்வர் விரைந்து திறந்திட கோரி மக்கள் நீதி மையம் சார்பில் ஆர்ப்பாட்டம்

153views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை காமராஜர் பல்கலைக்கழக வளாகம் முன்பு 40 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று முடிவற்றது. இதனை தொடர்ந்து தற்போது மேம்பாலத்தில் மின்விளக்கும் அமைக்கும் பணிகள் நடைபெறாததால் திறப்பு விழா நடைபெறாமல் உள்ளது.
தற்போது மேம்பால வேலைகள் முடிந்து மின் விளக்குகள் அமைக்கும் பணிக்காக பொதுப்பணித்துறை மற்றும் மின்துறை அதிகாரிகள் டெண்டர் விடாதாதால் பாலம் திறக்கப்படுதில் தாமதம் ஏற்படுகிறது.
மக்கள் நீதி மையம் கட்சி சார்பில்மாநிலச் செயலாளர் சிவ இளங்கோ மற்றும் மாவட்டச் செயலாளர் மணி உள்ளிட்ட 11 பேர் காமராஜர் பல்கலைக்கழக பாலத்தை பணி முடித்து விரைந்து திறக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர் தகவல் அறிந்து வந்த நாமலை புதுக்கோட்டை போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!