தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் தியாக பெருநாள் சிறப்பு தொழுகை; ஏராளமானோர் பங்கேற்பு

69views
தென்காசி மாவட்டத்தில் பக்ரீத் தியாக பெருநாளை முன்னிட்டு தென்காசி, செங்கோட்டை, வல்லம், கடையநல்லூர், பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், பகுதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தென்காசியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தென்காசி தவ்ஹீத் ஜமாத் சார்பில் பழைய ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட தலைவர் உஸ்மான் பிர்தௌசி சிறப்பு தொழுகையை நடத்தினார். தொடர்ந்து ரஹ்மத்துல்லா இம்தாதி குத்பா பேருரையை நிகழ்த்தினார்.
தென்காசி மஸ்ஜிதுர் ரகுமான் ஜும்மா பள்ளிவாசல் ஜமாத் சார்பில் தென்காசி முஸ்தபியா நடுநிலைப் பள்ளியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் மசூது அலி தலைமை தாங்கினார். தொழுகை நடத்திய இமாம் அயூப் அலி பைஜு சிறப்புரை ஆற்றினார். செயலாளர் அமானுல்லா, பொருளாளர் ரெசவு முகம்மது, துணைத் தலைவர் மைதீன் சேட்கான், துணைச் செயலாளர்கள் நயினார் முகமது, நகர் மன்ற உறுப்பினர் நாகூர் மீரான், மைதீன், ஹாரூன்ரஷீத், செய்யது சுலைமான், பிலால், பீர், சாத் செயற்குழு உறுப்பினர்கள் டிரைவர் மைதீன் கோகோ அலி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மமக மாவட்ட செயலாளர் சலீம் கொலம்பஸ் மீரான், கோதரி மசூது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி நகரத் தலைவர் முகம்மது உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
சிறப்பு தொழுகையை தொடர்ந்து இதில் பங்கேற்றவர் அனைவரும் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சிகளை ஏழைகளுக்கு வழங்கினார்கள். இதே போன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வல்லம் பிஸ்மி நகர் திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட பேச்சாளர் வல்லம் அஹமது, பெருநாள் சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் வல்லம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும், முதியவர்களும், குழந்தைகளும் திடலில் நடைபெற்ற இந்த பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். சிறப்புத் தொழுகையில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்களுக்குள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். திடல் தொழுகைக்கான ஏற்பாடுகளை கிளை பொறுப்பாளர் அக்பர் அலி, அகமது மைதீன், திவான் ஒலி,அனஸ், செய்யது மசூது, மைதீன் பாவா, செய்யது சுலைமான் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!