தமிழகம்

காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி : தீயணைப்பு துறை ஏற்பாடு

53views
வேலூர் மாவட்ட பள்ளி கல்வி துறை மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் வேலூர் அடுத்த காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தீவிபத்தில்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்து விளக்கவுரை, செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.
இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சரளா, ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், காட்பாடி தீயணைப்பு துறை அலுவலர்கள் பால்பாண்டி, முருகேசன், தீயணைப்பு வீரர்கள், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!