தமிழகம்

போதைப்பொருள் எதிராக விழிப்புணர்வு பேரணி

23views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி போதைப்பொருள் எதிர்ப்பு கழகம் சார்பாக 20.02.2025 அன்று போதைப்பொருள் பயன்படுத்தலுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் திரு. S.E.A. ஜபருல்லாகான் அவர்கள் தலைமையில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி சென்றனர். மேலும் விழிப்புணர்வு ஓட்ட போட்டி நடைபெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் துணைமுதல்வர் முனைவர் A. முஸ்தாக் அஹமது கான் அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினர். நிகழ்வினை கல்லூரி போதைப்பொருள் எதிர்ப்பு கழக ஒருங்கிணைப்பாளர் முனைவர் S. காளிதாசன் மற்றும் இணைஒருங்கிணைப்பாளர் முனைவர் S. நாசர் ஆகியோர் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!