தமிழகம்

ஆற்காடு அருகே மாம்பாக்கத்தில் பட்டாசுக்குப் பதிலாக நாட்டு வெடி: சிறுமி உயிரிழப்பு

212views
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே மாம்பாக்கத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும்போது பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறிய பட்டாசின் வீரியத்தால் மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் -அஸ்வினி தம்பதியின் மகள் சிறுமி நவிஷ்கா(4) மற்றும் பெரியப்பா விக்னேஷ் ஆகியோர் காயம் அடைந்தனர். சுற்றி இருந்த உறவினர்களுக்கு காயம் ஏற்பட்டது.  படுகாயம் அடைந்த சிறுமி உயிரிழந்தார்.  விக்னேஷ் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  வாழைப்பந்தல் காவல்துறை விசாரணை செய்ததில், விக்னேஷ் பட்டாசுக்கு பதிலாக நாட்டு வெடிவைத்து வெடித்ததால் இந்த துயர சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!