தமிழகம்

தமிழக ஆம் ஆத்மி கட்சி சென்னையில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம்! அனைத்துக் கட்சிகள் பங்கேற்பு!

24views
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி மாநில முதலமைச்சருமான திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை அரசியல் பழி வாங்கும் நோக்கில் பாரதிய ஜனதா கட்சி அரசு கடந்த மூன்று மாதங்களாக பொய் வழக்கில் கைது செய்து ஜனநாயகத்தை படுகொலை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக அவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.  தற்பொழுது மீண்டும் சிபிஐ கைது செய்து இருக்கிறது.
இந்த ஜனநாயக விரோத செயலை சட்டவிரோத செயலை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக இன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள சாஸ்திரி பவன் எதிரில் தமிழக ஆம் ஆத்மி கட்சி தலைவர் திரு.வசீகரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் இந்தியா கூட்டணியைச் சார்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் தமிழ்நாடு மாநில அமைப்பு செயலாளர் திரு.ராம்மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயற்குழு உறுப்பினர் திரு.கே.கனகராஜ் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆய்வு செயலாளர் வழக்கறிஞர் திரு.அந்திரிதாஸ் வழக்கறிஞர் திரு.எம்.எல்.ரவி, கொளத்தூர் திரு.கார்த்திக் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுனர்.
ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநில மகளிர் அணி தலைவி மற்றும் மாநில குழு உறுப்பினர் திருமதி ஸ்டெல்லா மேரி, மாநில மனித உரிமை பிரிவு செயலாளர் திரு.ஏ.டி.முருகன், தஞ்சை மண்டல செயலாளர் திரு எம்.எஸ்.கே, மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு ஆரிப், வடசென்னை மாவட்ட தலைவர் திரு.பாரூக், மேற்கு சென்னை மாவட்ட செயலாளர் திரு.பன்னீர்செல்வம், தஞ்சை மண்டல தலைவர் திரு எம்.எஸ்.கே, திருவாரூர் மாவட்ட தலைவர் திரு.வினோத்குமார், நீலகிரி மாவட்ட தலைவர் திரு மானு, வடசென்னை மாவட்ட செயலாளர் திருமதி சோபியா பாமா ராணி, விழுப்புரம் மாவட்ட செயலாளர் திரு.சுகுமார் மாவட்ட இணை செயலாளர் திரு.விஜயகுமார் மற்றும் ஏராளமான ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!