தமிழகம்

மீனவ மக்களுக்கு எதிராக செயல்படும் தமிழ்நாட்டரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

82views
தமிழ்நாடு புதுவை மீனவர் சமுதாய பாதுகாப்பு குழுவின் சார்பில் திரு. ரூபேஸ் குமார் அவர்களின் தலைமையில் திரு.இரவி முன்னிலையில் கடந்த 19/8/2023 அன்று நடைபெற்ற கடல் தமிழக மீனவ மக்களின் கடல் உரிமைகளை பறிக்கும் ‘கடல் மேலாண்மை திட்ட குழு’ என்ற அமைப்பை கலைக்கவும் தமிழக கடலோரங்களில் காற்றாலை, புதிய துறைமுகங்கள் அமைத்து மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கவும் நடக்கும் செயல்களை தடுக்கவும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரவும் நடத்தப்பட்ட சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தன்னுரிமை இயக்கத்தின் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதில் கடல்சார் மக்கள் நல சங்கமத்தின் பிரவீன்குமார் பரதவர், எழுத்தாளர் கடலார் வேலாயுதம், பேராசிரியர் புதுவை அசோக சுப்பிரமணியம், புகழேந்தி என பலரும் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இதில் நிறைந்த தாய்மார்களும் ஆண்களும் என் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மீனவ மக்களுக்கு எதிராக செயல்படும் தமிழ்நாட்டரசை கண்டித்து நடந்த, கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாவலர் மு இராமச்சந்திரன்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!