தமிழகம்

ஓசூரில் NIA – வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

251views
ஒன்றிய அரசின் தொடர் தோல்வி மற்றும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக….
SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் மாநில நிர்வாகிகள் வீட்டில் அத்துமீறி நடைபெற்ற NIA சோதனையை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் N.ஷாநவாஸ் தலைமையில், ஓசூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமூக ஊடக அணி வேலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் B.ஷபீர் அகமத் வரவேற்புரை மற்றும் தொகுப்புரை ஆற்றினார்.  மாவட்ட பொது செயலாளர் R.ஷபியுல்லாஹ் அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் N.ஷாநவாஸ், மாவட்ட செயலாளர் ஜாவித்,மனிதநேய ஜனநாயக கட்சி ஓசூர் ஒன்றிய செயலாளர் பாஷா,அவர்கள் கண்டன உரையாற்றினார்.

மேலும் இதில் மாவட்ட பொருளாளர் B.அப்துல் கலீம்,மருத்துவ ஆணி மாவட்ட தலைவர் முஹம்மத் பாரூக்,சமூக ஊடக அணி மாவட்ட செயலாளர் B.நூர் அஹ்மத், நகர தலைவர் சபி,நகர செயலாளர் லியாகத்,நகர பொருளாளர் ஷேக் ஸுபைர்,தளி தொகுதி தலைவர் முஹம்மத் பாரூக், தொகுதி செயலாளர் ஆஸ்கர்,தேன்கனிக்கோட்டை நகர தலைவர் சுபேர்,மற்றும் தொகுதி நகர கிளை நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர்AR.இம்ரான் நன்றி உரை ஆற்றினார்.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!