தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் ஆலையத்தில் விஸு பண்டிகையை முன்னிட்டு18 படிகளில் விதவிதமான பழங்கள் வைத்து படிப்பூஜை கோலாகலம்

90views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் ஸ்ரீ ஐயப்பன் ஆலையம் உள்ளது. இக்கோயிலில் தினமும் காலை மாலையில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு நாளில் கேரளாவில் விஸு பண்டிகை கொண்டாடப்படும், அதன்படி இந்த கோயிலில் காலையில் ஐயப்பனுக்கு அபிஷேகம் நடந்தது.பின்பு மா, பலா, வாழை, தர்ப்பூசணி, ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, கொய்யா, திராட்சை, நேந்திரம், சப்போட்டா உள்ளிட்ட பழங்கள்18 படிகளில் வைக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன. இரவில் ஐயப்பனுக்கு18 படிபூஜை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு ஐயப்பன் பாடலை, பாடி, தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மூத்த குருசாமிகள், கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!