தமிழகம்

காட்பாடி அருகே புரட்சிதலைவர் எம்.ஜி.ஆருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்த அதிமுக விசுவாசி

46views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியை சேர்ந்தவர் டி.கே.முரளி, தீவிர எம்.ஜி.ஆர்.விசுவாசியான முரளி, எம்.ஜி.ஆருக்கு தனி கோயில் கட்ட முடிவு செய்தார். அதன்படி தொண்டான் துளசி சாலையில் கடந்த 2 ஆண்டுகளாக கோயில் கட்ட செய்தார். இந்து, கிருஸ்துவ, இசுலாமிய மத சின்னங்களை நினைவுகூறும் வகையில் கோயில் கட்டப்பட்டு மூலவராக எம்ஜிஆர் சிலை அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் சென்னை மனிதநேய அறக்கட்டளை நிறுவுனர் சைதை துரைசாமி, வேலூர் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், தொழிபதிபர் சேகர் ரெட்டி,ஐடா ஸ்கடர் டிரஸ்ட் தலைவர் தவசீலன் காட்பாடி ஹோட்டல் லட்சுமி பவன் உரிமையாளர் கே.ஆர்.ரவி, முன்னாள் சோளிங்கர் அதிமுக செயலாளர் ஆனந்தன் மற்றும் எம்ஜிஆர் விசுவாசிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!