முதுமலை வனப்பகுதியில் தாய் தந்தையை இழந்த யானைகளை வளர்க்கும் பொம்மு பெள்ளி தம்பதிகளின் யானை வளர்ப்பை ஆவணப்படமாக்கியவர்கள் ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறார்கள். பெற்றோர்கள் தாங்கள் பெற்ற பிள்ளைகள் மேல் காட்டும் அன்புக்கு சற்றும் சளைத்ததல்ல.
பொம்முவும் பெள்ளியும் யானை மேல் காட்டும் அன்பு. ரகு,அம்மு ஆகிய இரு யானைக்குட்டிகள் நாற்பது நிமிடத்தில் நமக்கும் செல்லக்குட்டிகளாகி விடுகிறார்கள். குட்டி யானைகளின் சேட்டையும்,குறும்பும்,லாவகமும் சொன்ன சொல்லுக்கு கட்டுப்படும் பண்பும் வியப்பளிக்கிறது. முதுமலையின் அழகும்,வனம் மற்றும் வன விலங்குகளின் வசீகரமும் நெஞ்சை அள்ளுகின்றன.
தமிழ் போலவே ஒலிக்கும் படுகர் இன மொழி பேசும் பொம்முவும் பெள்ளியும் தங்கள் கானக யானை வளர்ப்பு அனுபவங்களை நம்மிடம் சொல்ல அவர்களிடம் அதிக வார்த்தைகள் இல்லை. ஆனால் அதிக அர்த்தமுள்ள வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள்.
ஆவணப்படப் பிரிவில் ஆஸ்கார் விருதை வென்ற இயக்குநர் கார்த்திகி, தயாரிப்பாளர் குன்நிட் மோங்கா இரு பெ(க)ண்மணிகளுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.