தமிழகம்

1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13-ம் தேதி வரை பள்ளிகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு

155views

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13-ம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மே 13-ம் தேதி வரையில் பள்ளி வேலை நாட்களாகும். மேலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரையில் செய்முறைத்தேர்வு நடத்தப்படும். அதே போல 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 5-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையில் தேர்வு நடத்தப்படும்.

மேலும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியிடப்படும். 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மே 13-ம் தேதி வரையில் பள்ளிகள் செயல்படும்’ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல 2022-23-ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு தவிர, பிற மாணவர்களுக்கு ஜூன் 13-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் எனவும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!