செய்திகள்தமிழகம்

பா.ஜ.வை பகைத்து கொள்ளாமல் அரசியல் செய்ய தி.மு.க. விரும்புகிறது என்று நாம்

65views

பா.ஜ.வை பகைத்து கொள்ளாமல் அரசியல் செய்ய தி.மு.க. விரும்புகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.வை முதன்மை எதிரியாக கட்டமைத்து அக்கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்து தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் தற்போது பா.ஜ. செல்கிற பாதையில் செல்வதும் அக்கட்சியுடன் மென்மையான போக்கை தி.மு.க. கடைப்பிடிப்பதும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது.

பா.ஜ.வை வலிமை கொண்டு எதிர்த்து அரசியல் செய்யாமல் பா.ஜ. செய்யும் அரசியலுக்குள் கரைந்து போகும் தி.மு.க.வின் செயல்பாடுகள் பிழைப்பு வாதமாக உள்ளது.

இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தில் கூறப்பட்ட ஒன்றியம் என்ற சொல்லை பயன்படுத்தியதைத் தாண்டி தி . மு . க . அரசு பா . ஜ . வை எதிர்த்து வீரியமாயச் செய்த அரசியல் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ.வை பகைத்துக் கொள்ளாமல் அரசியல் செய்யத்தான் தி.மு.க. விரும்புகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.மேற்கு வங்க முதல்வர் மம்தாவை போல பா.ஜ.க அரசை எதிர்த்து மாநில உரிமைகளை நிலைநாட்ட தி.மு.க. அரசும் முன் வர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!