தமிழகம்

பாலியல் புகாரில் சிக்கிய PSBB பள்ளி ஆசிரியர், முதல்வர் உள்ளிட்ட 5 பேருக்கு சம்மன்!

108views

பாலியல் புகாரில் சிக்கிய PSBB பள்ளி ஆசிரியர், முதல்வர் உள்ளிட்ட 5 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் கைதான ஆசிரியர், PSBB பள்ளி முதல்வர், நிர்வாகிகளுக்கு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. முதன்மை கல்வி அலுவலர் மற்றும் முன்னாள் மாணவி ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் .ஆசிரியர் பள்ளி நிர்வாகி உட்பட 5 பேர் ஜூன் 4 குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது படித்து வரும் மாணவிகளின் விவரங்களை வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆசிரியருக்கு எதிராக எந்த தகவலும் கொடுக்க முடியாது என தற்போதைய மாணவிகள் தெரிவித்தனர். மாணவிகள் தகவல் தர மறுப்பதால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தொடர்பு கொள்வதில் தொய்வு என்று ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!