தமிழகம்

”பள்ளிகள் திறந்த உடன் சத்துணவு”- தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

589views

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்குக் கொரொனா தொற்றுப் பரவியது. இத்தொற்று பரவலால் இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தால் இரண்டாம் அலை பரவிவருகிறது. இதனால் பள்ளிகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்ட்து. பின்னர் செப்டம்பர் 1 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.

அடுத்து, 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் எனத் தெரியவில்லை. இந்நிலையில்,. தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில். பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவுத் திட்டத்தை துவங்க வேண்டுமெனக் கூறியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!