தமிழகம்

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

57views

தீபாவளியை முன்னிட்டு வெளியூர்களுக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படு கின்றன.

 தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊா்களுக்குச் செல்பவர்களின் வசதிக்காக திங்கள்கிழமை வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 1,285 சிறப்பு பேருந்து களும் இயக்கப்படுகின்றன. இதற்காக சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிறுத்தத்தில் 2 முன்பதிவு மையங்களும் திறக்கப்பட்டுள்ளன.

இந்த பேருந்துகள் நவ.1 முதல் 3 வரை இயக்கப்படும். சென்னையில், கே.கே. நகா் பேருந்து நிலையத்தில் இருந்து, இசிஆா் வழியாக புதுச்சேரி, கடலூா் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூா் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் வழியாக, திருவண் ணாமலை, போளூா், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மாா்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூா், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னாா் கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூா், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பூந்தமல்லியில் இருந்து வேலூா், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூா், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப் படுகிறது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங் கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூா், நாகா்கோவில், கன்னியாகுமரி, மாா்த்தாண்டம் , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூா், திண்டுக்கல், விருதுநகா், திருப்பூா், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூா் மற்றும் பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!